tamilnadu

img

கோவை விமானநிலையத்தில் ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!

அபுதாபியில் இருந்து இன்று காலை கோவை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்களை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை- அபுதாபி இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமானச் சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பயணி ஒருவரின் உடைமையைச் சோதனை செய்த போது அதில் 'எஸ்சி' என்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் முன்புறம் வேறு உணவுப் பொருள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுக் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மொத்தம் ரூ 1.4 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரம் சிகரெட்கள் இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.