சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க கோரிக்கை
கோவை, ஜூன் 22- சுமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு மருத்துவக் காப்பீடு திட் டத்தை அமல்படுத்த வேண்டும், என சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. கோவை ஜில்லா சுமைதூக்கும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட 18 ஆவது மகாசபை, சிவா னந்த காலனி பகுதி அருகே தோழர் எஸ்.ஆறுமுகம் நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைச்செய லாளர் பி.சுப்பிரமணி வரவேற்றார். கோவை மாவட்ட தங்க நகை தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் பி.சந்திரன் துவக்கவுரை யாற்றினார். பொதுச்செயலாளர் ஆர்.ராஜன், பொருளாளர் எம்.எஸ். பீர் முகமது ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். இதில், அனைத்து சுமைப்பணித் தொழிலா ளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளை பேசி தீர்க்க, முத்தரப்புக்குழு அமைக்க வேண்டும். கோவை மாந கராட்சியில் குடிநீர் வழங்கும் உரிமம் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக் கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங் கத்தின் மாவட்டத் தலைவராக எம். ராதாகிருஷ்ணன், பொதுச்செயலா ளராக ஆர்.ராஜன், பொருளாளராக பி.சுப்பிரமணி உள்ளிட்ட 13 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர். சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் ஏழுமலை நிறைவுரையாற்றி னார். துணைத்தலைவர் எஸ்.பி.சர் புதீன் நன்றி கூறினார்.