பழைய சோஃபாக்கள், மெத்தைகள் அகற்றும் பணி
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், ஒவ்வொரு சனிக்கிழமையிலும், மக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றை வீட்டு வாசலிலேயே சேகரிக்கும் சேவை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சோழிங்கநல்லூர் மண்டலம், ராஜீவ் காந்தி சாலை, எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பயனற்ற பொருட்கள் அகற்றப்பட்டன.
