வெல்வோம் 200; படைப்போம் வரலாறு! துணை முதல்வர் சூளுரை
சென்னை, நவ. 27 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (நவ. 27) அன்று தனது 49-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி னார். இதையொட்டி பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில், “நான் யாரையும் வாழ்த்த வரவில்லை, உங்களிடம் வாழ்த்து பெற வந்துள்ளேன் என்று கூறினார். மேலும், “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு, அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி” என்றும் தெரிவித்தார்.
