tamilnadu

img

ஸ்பெல் பீ இறுதிச் சுற்றுக்கு   கோவை  மாணவர் தேர்வு

கோவை, ஏப்.6- இந்தியாவின் மிகப் பெரிய ஆங்கில எழுத்துப் பயிற்சி மற்றும் புலமைக்கான போட்டி ‘கிளாஸ்மேட் ஸ்பெல் பீ’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.  தொடர்ந்து 12-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியின் தேசிய அளவிலான அரையிறுதித் தேர்வு அண்மையில் மும்பையில்  நடைபெற்றது. இணைய வழி  தொடர்பில் இந்த அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. தேசிய அளவிலான இப்போட்டியின் வெற்றியாளருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும், இப்போட்டியில் மிகச் சிறந்த ஆங்கில  மொழி சொற் புலமை கொண்ட  பல மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த போட்டியின் 3-ஆம் கட்டத்தில் நடைபெற்ற ஆன்லைன்  அரையிறுதி தேர்வில் பங்கேற்று  கோவை கிக்கனி மெட்ரிக்  பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவரான ஸ்ருஜன் வெற்றி பெற்றார். அடுத்தகட்டமாக, தேசிய அளவில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்க ஸ்ருஜன் தகுதி பெற்றுள்ளார்.