திருப்பூர், ஆக. 16 – தன்னிடம் வம்பு செய்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தீக்கதிர் செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு அவிநாசி செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவிநாசி தீக்கதிர் செய்தியாளர் அருண். இவரிடம் கரு வலூரைச் சேர்ந்த மோகன்தம்பி என்பவர் முன்விரோதத் துடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இது குறித்து வியாழனன்று இரவு அவிநாசி காவல் நிலையத்தில் அருண் புகார் கொடுத்தார். மறுநாள் அவர்களை அழைத்து விசாரிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி வெள் ளியன்று காவல் நிலையத்துக்கு அருண் சென்றபோது, எதிர்தரப்பினரிடமும் புகார் எழுதி வாங்கிக் கொண்டு, இரு தரப்பினர் மீதும் பிணையில் வர முடியாதபடி வழக்குப் பதிவோம் எனச் சொல்லி மிரட்டியதுடன், அருணின் செல் போனையும் பறித்து வைத்துக் கொண்டு குற்றவாளி போல் அமர வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அங்கு சென்று பேசியதன் அடிப்படையில் அருணிடம் எழுதி வாங்கிக் கொண்டு செல்போனை கொடுத்தனர். செய்தியாளர் அருண் சட்டப்படி புகார் கொடுத்ததன் மீது முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக காவலர் சிவப்பிரகாசம் என்பவர் தரக்குறைவாக நடந்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி செய்தியாளர்கள் டிஎஸ்பியை சந்தித்து முறையிடுவதென முடிவு செய்துள்ளனர். செய்தியாளர் புகார் கொடுத்தாலே இதுபோல் தரக்குறைவாக நடந்து கொள்ளும் காவலர்கள் சாமானிய மக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.