அடிக்கடி கை கழுவுதல், சானி டைசர் உபயோகப்படுத்துதல், வெளியே சென்று வந்தால் உடனே குளித்தல், வீட்டை எப்போதும் சுத்த மாக வைத்திருத்தல் என கொரோனா காலத்தில் வழக்கமான ஒன்றாக மேற்கண்டவை மாறிவிட்டது.
இவை கொரோனாவிற்குப் பின்பும் கூட நம் வாழ்வில் பல காலங்களுக்குத் தொடரும் என ஆய்வாளர்கள் கூறு கின்றனர். சுகாதாரத்தின் அவசி யத்தை உணர்த்தும் இம்மாதிரிப் பழக்கங்கள் நம் வாழ்வில் ஒன்றிப் போன இதே காலகட்டத்தில் தான், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தகரத்தைக் கொண்டு அடைத்து நரகமாக்கும் நடவடிக்கைகளும் அரங்கேறின.
அதுவும் அடைத்து வைக்கப்பட வேண்டிய வீடு ஒரு காம்பவுண்டாக (பொதுக் கழிவ றையை உபயோகிக்கும் 7,8 குடும்பங் கள் சேர்ந்து வாழும் பகுதியாக) இருந்து விட்டால் நரகத்தின் உச்சம்தான். இவ்வாறு கோவையில் கொத்துக் கொத்தாக பல குடும்பங் கள் தகரத்தால் அடைத்து வைக்கப் பட்டன. தற்போது அத்தகரங்கள் நீக்கப்பட்டு சற்று இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், பாதிக்கப் பட்ட குடியிருப்பு வாசிகளை சந்தித்த போது..
சளி, காய்ச்சல் இருக்கா என கேட்டவர்கள், உணவிருக்கா என கேட்கவில்லை...
தன் காம்பவுண்டில் ஒரு வயதா னவருக்குக் கொரோனா வந்ததன் விளைவாக தன் குடும்பம் உட்பட 21 குடும்பங்கள் தகரத்தைக் கொண்டு அடைத்து வைக்கப்பட்ட கொடு மையை ராஜேஸ்வரி என்பவர் பகிர்ந்து கொண்டபோது, வெளியே போக முடியாது என்பதைத் தாண்டி எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு யாரும் உதவ வராமல் இருந்தது தான் எங்களுக்கு பெரும் மன உளைச்சலாக இருந்தது.
குழந்தை கள், வயதானவர்கள் என எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர். இதே ஊரில் உறவினர் உள்ளோருக்கு அவர்கள் வெளியிலிருந்து வந்து உதவுவார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நாங்கள் வெளியூரி லிருந்து வந்து தங்கியுள்ளோம். உற வினர் யாரும் இங்கு இல்லை என்ப தோடு வெளியே வேலைக்குச் சென் றால்தான் எங்களுக்கு உணவு.
எனவே எங்களால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. வெளியே சுகாதாரத்துறை ஊழி யர்கள் உள்ளார்கள் தான். ஆனால் நாங்கள் காசு கொடுத்தால் தானே எதையாவது அவர்கள் மூலம் வாங்க முடியும்? மளிகைக் கடைகளில் கட னும் கொடுப்பதில்லை. கொடுத்த நிவாரணப் பொருட்களும் ஒன்றும் பெரிதாக உபயோகப்படவில்லை. வாரத்திற்கு ஒருமுறை சளி, காய்ச்சல் இருக்கா என கேட்க மாநகராட்சியில் இருந்து ஊழியர்கள் வந்தனர். ஆனால், உண்ண உணவு உள்ளதா என ஒருவரும் எங்களைக் கேட்கவேயில்லை. அந்த நிலையிலெல்லாம் எங்கள் குடும்பத் தினர் சரியாக உண்ணக் கூட உணவு இல்லை.
இது ஒருபுறம் இருக்க வெளியில் இருப்பவர்கள் எங்களைக் கண்டாலே வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தது பெரும் கவலையை ஏற்படுத்தியது. கொரோனா வந்தவர் கூட பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லப்பட்டு குணமாக்கப்பட்டார். ஆனால், அந்த 15 நாட்கள் அருகில் வசித்த நாங்கள் தான் சொல்லொண் ணாத் துயருக்கு ஆளாக்கப்பட்டோம். மேலும் அந்த சூழ்நிலை எங்களை இன்னமும் பயத்தில் தான் தள்ளியது.
அதாவது, நிதமும் எங்களை அடைத்து வைத்து வீட்டிற்கு முன் எப்போதும் பலரை பரபரப்பாக்கியதே யொழிய, கொரோனா குணப்படுத்தக் கூடிய ஒரு நோய் தான் என எங்களை நம்பவைக்க அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு சார்பாக எங்களுக்கு எந்த உதவியும் நேரடியாகக் கிடைக்க வில்லை. ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது என்ன கணக்கு என்றே தெரியவில்லை.
ஆறு பேர் உள்ள குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய், இருவர் உள்ள குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் என்பதெல்லாம் அரசின் பாரபட்சமான நடவடிக்கைக ளில் ஒன்றே அன்றி வேறல்ல, என்கிறார் ராஜேஸ்வரி.
பால் பாக்கெட்டே பேருதவிதான்...
இதே இன்னலுக்கு உள்ளான முருகன் என்பவர் குறிப்பிடுகையில், அரசைப் பொறுத்தவரை அனை வரும் கொரோனா இல்லாமலும் உயிர் வாழ வேண்டும் என்ற பொறுப் புணர்வு என்பதே கிடையாது. நிறைய அரசியல் கட்சிகள், அமைப்புகள் உதவுகிறோம் என தொலைபேசி எண் வெளியிட்டிருந்தனர்.
அதற்கெல்லாம் அழைத்தபோது உங்கள் நிலைக்கு வருந்துகிறோம் என தான் ஆறுதல் தெரிவித்தனரே தவிர உதவி ஒன்றும் நேரடியாகக் கிடைக்கவில்லை. அர சைப் பொறுத்தவரை ஒன்றும் வேண்டாம், ஒரு டிப்போவில் பால் பாக்கெட் விநியோகித்திருந்தால் கூட அதுவே எங்களுக்குப் பேருதவியாக இருந்திருக்கும். ஏனெனில் தின வேலைக்குச் சென்றால் தான் எங்க ளுக்கு தினசரி உணவு என்றிருக்கும் போது அரசின் இம்மாதிரியான உதவிகள் எல்லாம் தான் எங்க ளுக்குத் தேவை.
காசு இருந்தும் பயனில்லை...
இவரின் குடியிருப்பின் அருகே வசிக்கும் ஒரு இளைஞர் குறிப்பிடு கையில், எங்கள் குடும்பத்தில் 4 பேர். நான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதால் உணவின் செலவைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை. ஆனால் அதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் தான் பிரச்சனை. சுகாதாரத்துறைப் பணியா ளர்கள் வாங்கிவந்து கொடுத்தாலும், கேட்கும்போதெல்லாம் செய்ய அவர் கள் உண்மையில் தயாராக இல்லை.
எனவே, எங்களின் பிரச்சனை இவ் வாறானதாக இருந்தது. காசு இருந் தும் எங்களுக்கே இந்நிலையெனில் இல்லாதவர்களின் நிலை நிச்சயம் எங்களை விட மோசமானதாகத் தான் இருந்திருக்கும். ஏனெனில் கொரோனா காலத்தைப் பொறுத்த வரை தினக்கூலிகளோ, சொந்த தொழில் செய்பவர்களோ யாராக இருந்தாலும் மொத்தமாக வாழ் வாதாரத்தை இழக்கக் கூடிய சூழலுக்கு தற்போது தள்ளப்பட்டு விட்டனர்.
கடனை நம்பித் தான் பெரும்பாலானோரின் நிலை இருக்கும். ஆனால் இவ்வாறு அடைக்கப்பட்டோருக்கு அந்த வாய்ப்பும் இருக்காது. கொரோனா வந்தவருக்குக்கூட அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று உணவு போடும். ஆனால், இவ்வாறு சம்பந்தமில்லாமல் அடைக்கப்பட் டுள்ள அருகில் வசிப்போருக்கு அந்தப் போக்கிடமும் கிடை யாது. இதையெல்லாம் குறித்து அரசு கவலைப்பட்டதாவும் தெரியவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்வின் இருண்ட நாட்கள்
உஷா என்னும் குடியிருப்புவாசி கூறுகையில், கொரோனா ஒருவ ருக்கு வந்தால் அவரை மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று விடு கிறார்கள். அவர் இருந்த வீட்டைத் தனிமைப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் உடன் குடியிருப்பவர்களை யும் அடைத்து வைக்க வேண்டும் என நிர்பந்திக்கும்போது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு.
ஆனால், அதை அரசு எங்களுக்குச் செய்யவில்லை. ஏனெனில் இங்கு வசிக்கும் அனைவரும் அன்றாடக் கூலிகளாவர். எங்களுக்கு அன் றாட உணவிற்கே பிரச்சனை என்கிறபோது, நிறைய செலவுகளை குறைத்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலைகள் வருகிறது. அம்மாதிரி யான சூழ்நிலைகளில் பல பெண் குழந்தைகள் நாப்கின்கள் வாங்கும் தேவையைக் கூட குறைத்துக் கொண்ட அவலம் நிகழ்ந்தது.
இன்ன மும் பல சொல்லொன்னா சூழ்நிலை களை மக்கள் கடந்து வந்தனர். தற்போது அரசு இந்நடவடிக்கை களை சற்று தளர்த்தியிருந்தாலும் எங்கள் வாழ்வின் இருண்ட நாட்களாக இவை நிச்சயம் பதிவு செய்யப்படும். ஏற்கனவே வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை தகரத்தைக் கொண்டு ஒட்டு மொத்தமாக அடைப்பதை விடக் கொடுமை வேறொன்றுமில்லை. இவை பேசத் திராணியற்ற மக்களை உயிரோடு புதைப்பதற்கு சமா னமானதாகும், என்கிறார் உஷா.
அரசல்ல, அநியாயம்
ராஜேந்திரன் என்பவர் குறிப்பிடு கையில், ஏற்கனவே வாழ வழியின்றி, வருமானமின்றி மக்கள் மனநோய் பிடித்தாற்போல் வாழ்ந்து வரும் நேரம் இது. அப்படிப்பட்ட நிலையில் மக்களை நிராயுதபாணியாக நிர்கதி யாக்கி ஒரு உதவியும் செய்யாமல் சிறைபிடித்தாற் போல் அவர்களை தகரத்தால் ஒரு அரசால் அடைக்க முடியுமானால் அதற்குப் பெயர் அரசல்ல, அநியாயம் என்பதே சரி யாக இருக்கும்.
காசு இருப்பவர்கள் உணவு வாங்க முடியாமல் ஒரு புற மும், காசு இல்லாதவர்கள் உயிர் வாழப் படும்பாடு ஒரு புறமுமாக அடைத்து வைக்கப்பட்ட நாட்களில் எங்கள் காலம் கழிந்தது. வயதான ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது ஆம்புலன்ஸ் உள்ளே வரக் கூட அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தகரத்தை நாங்கள் உடைத்து விட்டு தான் அதனைச் சரி செய் தோம்.
இவ்வளவு ஏன், உண வுக்குக் கஷ்டப்படும் வயதானவர்கள் வழக்கமாக ஒரு கோவிலுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் உணவை உண்ணுவர். ஆனால் அது கூட அந்நிலையில் தடை செய்யப் பட்டது. அவர்களுக்கான உணவை அரசும் கூட வழங்கவில்லை. இது தான் அடைத்து வைக்கப்பட்டபோது மக்களின் நிலையாய் இருந்தது என்கிறார் ராஜேந்திரன். இவ்வாறு நம் கடந்து செல்கை யில் எதிர்படும் தகரத்தால் அடைக் கப்பட்ட வீடுகளுக்குள் கண்முன்னே கொண்டு வரப்படாத பல அழுகை கள் இன்னமும் யாருக்கும் தெரியா மல் உள்ளேயே அழுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
அண்மையில், சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தகரத்தைக்கொண்டு தொற்று பாதித்த வீடுகளை அடைத்து வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவும்கூட சில நாட்களுக்கு முன்பு தகரம் கொண்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பத்தார் குறித்தான அதிர்ச்சி கரமான வீடியோ வெளியாகி அத னால் எழுந்த கொந்தளிப்பின் கார ணமாக நிறுத்தப்பட்டது என்றாலும், மிச்சமிருக்கும் சில குடும்பங்களேனும் அந்த நரகத்திலிருந்து தப்பியுள்ளது என்பதே ஆறுதலாகும்.
-ச.காவியா