உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் கூட்டியக்கம் கண்டனம்
திருப்பூர். பிப். 27- சட்டப்படியான இழப்பீடு வழங்காமல் விளை நிலங்களில் அதிகாரிகள் அத்துமீறி பணிகள் மேற்கொள்வதற்கு உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவ சாய சங்கங்கள் கூட்டமைப்பு கண் டனம் தெரிவித்துள்ளது. உயர்மின் கோபுரகளுக்கு எதி ரான விவசாய சங்கங்களின் கூட்டி யக்கம், பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் திட்டத்தில் பாதிக்கப்படும் விவசா யிகள் கூட்டமைப்பு சார்பில் பல்ல டத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத் திற்கு பி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க திருப்பூர் மாவட் டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூத னன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செய லாளர் எஸ்.முத்து விஸ்வநா தன், தாராபுரம் சிவக்குமார், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்டத் தலை வர் பி.ஈஸ்வரன், ஐடிபிஎல் கூட்டி யக்கத்தின் எஸ்.வி.பாலசுப்பி ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவிச மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வரவேற்பு ரையாற்றினர்.
இக்கூட்டத்தில் விவசாயிக ளுக்கு 2013 நில எடுப்பு சட்டப் படியான சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். கிணறு, ஆழ்துளை கிணறு, வீடு, கோழிப்பண்ணை போன்ற கட்டுமானங்களுக்கு சந்தை மதிப்பிலான 4 மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். தென்னை மரத்திற்கு கோவை மாவட்டத்தில் இழப்பீடு வழங்கு வதைப் போல் வழங்க வேண்டும். சட்டப்படியான இழப்பீடு வழங் காமல் அத்திட்ட பணிகளை மேற் கொள்ளக்கூடாது. உயர்மின் கோபுரம், கம்பி வழிப்பாதையை குறிக்கும் வரை படம் உள்ளிட்ட ஆவணங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக வெளிப்படைத் தன்மையுடன் வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டது.
முன்னதாக, இக்கோரிக்கை களை விளக்கி கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.கே. சின்ராஜ், ஈரோடு நாடா ளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.சண்முக சுந்தரம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி ஆகி யோர் உரையாற்றினர். மேலும் இக்கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் சி.தங்கராஜ், கூட்டி யக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், தவிச மாநிலத் துணைத் தலைவர் ஏ.எம்.முனு சாமி, தற்சார்பு விவசாய சங்கம் தலைவர் கி.வெ.பொன்னையன், தவிபாச ஒருங்கிணைப்பாளர் பி.செந்தில்குமார், பவானி கவின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிறைவாக தமிழ்நாடு விவ சாய சங்க பல்லடம் ஒன்றிய செய லாளர் பழனிசாமி நன்றி கூறி னார்.