ஈரோடு, ஜூன் 26- மோட்டார் வாகனத் தொழிலை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் (சிஐடியு) சார்பில் 2019 ஆம் ஆண்டுக்கான மகாசபை ஈரோடு டி.பி.முத்து சாமி நினைவகத்தில் புதனன்று நடைபெற்றது. இம்மகாசபைக்கு சங்கத்தின் தலைவர் பாலு (எ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார். உதவித்தலைவர் சி.மாணிக்கம் வரவேற்றார். ஆட்டோ சமேளனத்தின் மாநில துணைத்தலைவர் பி.கே.சுகு மாறன் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செய லாளர் எஸ்.ஷேக்தாவூத், பொரு ளாளர் சி.வடிவேல், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் பொன்.பாரதி, ஆட்டோ தொழி லாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் என்.வேணுகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட் டனர். இதில் கௌரவத் தலை வராக எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட தலைவராக ஆர்.மோகனசுந்தரம், செயலாளராக எஸ்.ஷேக்தாவூத், பொருளா ளராக கே.ஸ்ரீதர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
மோட்டார் வாகனத் தொழிலை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும். ஆட்டோ தொழிலை சீரழிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும். நல வாரி யத்தை முடக்குவதற்கான நட வடிக்கைகளை கைவிட்டு, அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மீட்டர் கட்டணத்தை தொழிற்சங்கங்களுடன் பேசி நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.