tamilnadu

பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் கைது

ஈரோடு, ஜூலை 4- ஜவுளி கடையில் 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 செய்தியாளர்களை ஈரோடு சூரம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்த வர் சீனிவாசன். இவர் மனைவி சசிகலா (43) இருவரும் பழனியப்பா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்கள். இதில் சசிகலா செய்தியாளர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக சூரம்பட்டி காவல் துறையில் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கடந்த 24 ஆம் தேதி எங்கள் கடைக்கு வந்த 3 நபர் கள், தங்களை செய்தியாளர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அரசின் இலவச வேட்டி சேலை வியாபாரம் செய்கிறீர்கள். எங்களுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண் டும். இல்லை என்றால் எங்கள் பத்தி ரிக்கையில் உங்களைப் பற்றி செய்தி போட்டு விடுவோம் என மிரட்டி னார்கள். மேலும் உன்னையும், உன் குடும் பத்தையும் தொலைத்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத் தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். புகாரின் அடிப்படையில் ஈரோடு சூரம்பட்டி காவல் துறை யினர் சரவணன் தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினார் கள். இதில், வணக்கம் இந்தியா தினசரி நாளிதழ், அரசியல் முத்திரை மாத இதழ் நிருபர் கார்த்திகேயன் (42), மாணிக்கம்பாளையம் சுப்பிர மணியன் நகரைச் சேர்ந்த சட்ட பஞ் சாயத்து மாத இதழ் மாவட்ட நிருபர் கோபால் (44), இ.வி.என் சாலையை சேர்ந்த சட்ட பஞ்சாயத்து மாத இதழ் தலைமை நிருபர் தனஞ்ஜெயன் (38) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  ஏற்கனவே நாமக்கல் பகுதி யைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணம் கேட்டு மிரட்டியதாகக் காவல் துறையினரிடம் புகார் அளிக் கப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே போல வியாபாரிகளிடம் பணம் கேட்டு  மிரட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள் ளனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத பல பத்திரிகைகளில் பெயரைப் பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டு வது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முயற்சி எடுத்து இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடும் நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினசரி பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.