மேட்டுப்பாளையம், ஆக. 27- வனவிலங்குகளிடம் இருந்து விளைநிலங்களை காப்பாற்ற வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அருகே விவ சாயிகள் குடும்பத்துடன் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வனவிலங்குகளின் ஊடுருவல் காரணமாக பெருமளவு விவசாய விளை பொருட்கள் அழிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, வன உயிரி னங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு உடனடியாக இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வன ஊழியர்கள் தங்களது பணி எல்லைக்குள் வசிக்காமல் நகரப்பகுதியில் குடியிருந்து வருவதை தடை செய்ய வேண் டும். வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண் டும் என வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை பகுதியில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரு டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.