districts

மருத்துவக் காப்பீட்டை உடனே வழங்குக! ஓய்வு பெற்றோர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி,ஜன.29- அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி ஊதிய  ஒப்பந்தத்தை உடனே இறுதிப்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வை அமல்ப டுத்த வேண்டும். பணப்பலன்கள், டி.ஏ. உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பு திருச்சி, கரூர் மண்ட லங்கள் சார்பில் வியாழனன்று போக்கு வரத்து கழக திருச்சி தலைமை அலுவலகம் முன்பு ஓய்வு பெற்றோர் குடும்பத்துடன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன், மாதர்  சங்க மாவட்ட தலைவர் ரேணுகா ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு தலைவர் சின்னசாமி, துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொது  செயலாளர் கருணாநிதி, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். சங்க பொருளாளர் சிங்க ராயர் நன்றி கூறினார்.