பொள்ளாச்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையின் குறுக்கே சாக்கடை சிலாப் உடைந்து கம்பி அபாயகரமானதாக வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது . இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் அச்சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.