கோவை, ஜூன் 20- கல்வி உரிமைச் சட்டப்படி நலி வடைந்தவர்களுக்கு இடமளிக் காமல், செல்வந்தர்களை சேர்த் துள்ளதாக குற்றம்சாட்டி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலு வலகத்தில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனி யார் பள்ளிகளில் இலவசமாக 25 சதவிகித இடமளிக்க வேண்டும். இதற்கான தொகையை அரசு வழங்கும் என்பது இச்சட்டத்தின் அம்சமாகும். இந்நிலையில் பொள் ளாச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்தினர் இலவசமாக வழங்கப்பட வேண் டிய இடங்களை செஅல்வந்தர்க ளுக்கு கொடுத்துள்ளது. இதற்கு கல்வி அதிகாரிகள் உதவி செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாள ருமான மகாலிங்கம் தலைமை யில், மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், திமுக நிர்வாகிகள் கண்ணுசாமி, விசிக மாவட்ட செயலாளர் பிரபு, தபெதிக பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் பாதிக்கப்பட்ட பெற் றோர்களும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வியாழனன்று புகார் மனு அளித் தனர். இதில் முறைகேட்டில் ஈடு பட்டு வரும் மாவட்ட கல்வி அதி காரி மீதும், அரசு உத்தரவை மதிக் காமல் தன்னிச்சையாக செயல் படும் தனியார் பள்ளி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இக்கூட்ட மைப்பினர் அளித்த புகார் மனுவை கல்வி அதிகாரிகள் அலட்சியப் படுத்திய நிலையில், அவர்கள் திடீரென அலுவலகத்தின் வாயி லில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் குளறு படி இருப்பதும், அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும், அங்கீகாரமற்ற பள்ளிக ளின் பட்டியலை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் இது வரையிலும் வெளியிடாமல் இருப் பதும் பல்வேறு சந்தேகங்களை கல்வித்துறை அதிகாரிகள் மீது ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.