tamilnadu

சிறுமிகளின் திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

திருவண்ணாமலை, நவ. 12- திருவண்ணாமலை அருகே, விழுப்புரம் அருகேயும் சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திரு மணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.  திருவண்ணாமலை அருகே உள்ள  கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலி பர் ஒருவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் நிச்சயித்திருந்தனர். அதன்படி இருவீட்டாரும் கீழ்கச்சிராப்பட்டு கிராமத்திலுள்ள மணமகன் வீட்டில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த சிறுமி திருமணம் குறித்து சமூக  நலத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்ததையடுத்து, சமூக நலத்துறை அலுவ லர் கிறிஸ்டினா டார்த்தி உத்தரவின் பேரில்  சமூக நலத்துறை ஊழியர்கள், குழந்தை பாது காப்பு அலுவலர் மற்றும் காவலர்கள் மண மகன் வீட்டிற்கு சென்றனர். அப்போது திரு மணக் கோலத்தில் இருந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். சிறுமி 9 ஆம் வகுப்பு படித்திருப்பதும், 18 வயது பூர்த்தியடையாமல் இருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து 18 வயது பூர்த்தியடை யாமல் பெண்ணுக்குத் திருமணம் செய்யக்  கூடாது. இது சட்டப்படி குற்றம் என்று  பெற்றோரிடம் அதிகாரிகள் தெரிவித்த னர். பின்னர் சிறுமியை மீட்டுத் திருவண்ணா மலையிலுள்ள பெண் குழந்தைகள் காப்ப கத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சமூக  நலத்துறை சார்பில் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. 

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை பள்ளி வாசல் அருகே உள்ள திருமண மண்பத்தில், 17 வயது நிரம்பிய 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திரு மணம் நடக்க இருப்பதாக மாவட்ட ஆட்சி யருக்கு புகார் வந்ததுள்ளது.  மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், திண்டிவனம் மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் விஜி, சமூக நல விரிவாக்க அலுவலர் அம்சவேணி, ரோஷணை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். அப்போது, வந்தவாசியை சேர்ந்த 17 வயது, பிளஸ் 1 படித்து வரும் பள்ளி மாணவிக்கும், திண்டிவனம் அடுத்த நல்லாளம் கிராமத்தை சேர்ந்த அன்சர் மகன்  அப்துல் பஷீர்(27)என்பவருக்கும்  திருமணம்  நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, திருமண கோலத்தில் இருந்த அப்துல் பஷீர் மற்றும் அந்த சிறுமியை யும், காவல்துறையினர் திண்டிவனம் மகளிர்  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து, மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம், மைனர் பெண்ணிற்கு திரு மணம் செய்வது சட்டப்படி தவறு என்று அறி வுரை வழங்கி, அந்த சிறுமியை, விழுப்புரம் சமூக நலத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.