மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம், மார்ச் 4- சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓமலூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்திற் குட்பட்ட பழைய நல்லாக்கவுண்டம் பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை சிலர் ஆக்கி ரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு களை அளவீடு செய்து அகற்றமாறு 3 ஆண்டுக்கு முன்பு இப்பகுதி மக்கள் அதிகாரி களிடம் மனு அளித்தனர். மேலும் அளவீடு செய்வதற்கு பணம் செலுத்தினர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையீட்டனர். ஆனால் அதி காரிகள் மௌனம் காத்து வருகின்றனர். இந்த சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப் பால் தெருக்கள் குறுலாக உள்ளது. இத னால் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது.இது பொது மக்கள் கடும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அளவீடு செய்ய வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திறகு சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, ஓமலூர் தாலுகா செயலாளர் பி.அரியாக்கவுண்டர், வட்டக்குழு உறுப் பினர்கள் என்.ஈஸ்வரன், எம்.சின்ராஜீ, கே.கோவிந்தராஜி உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.