கோவை, மார்ச். 21– கொரோனாவிற்கு எதிரான ஊர டங்கை கோவையில் வெற்றிக ரமாக்கிட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வேண்டு கோள் விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதி வழியாக தமிழகத்திற்குள் வரும் கனரக வாகனம் உட்பட அனைத்து வாகனங்களும் தீவிர சோத னைக்கு பின்பே அனுமதிக்கப்படு கின்றது. தமிழகத்திற்குள் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை மீண்டும் வரும் 31 ம் தேதி வரை தமி ழகம் வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிக ளின் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றது. இந்த பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி மற்றும் கோவை எஸ்.பி.சுமித்ச ரண் ஆகியோர் தலைமையில் அதிகாரி கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். வாளையார் சோதனை சாவடி யில் சனியன்று ஆய்வு பணிகளை மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்க ளிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முழு வீச்சில் நடைபெறுகின்றது. கேரள எல்லையோராத்தில் மருத்துவகுழுக் கள் தீவிர சோதனை நடத்தி வரு கின்றது. கேரள மாநிலத்தில் இருந்து தமிழகதிற்கு அத்தியாவசிய பொருட்களுடன் வரக்கூடிய வாகனங் கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. பொது மக்கள், தனியார் வாகனம், பேருந்துகள் , சுற்றுலா வாகனம் , இரு சக்கர, மூன்று சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின் றோம். மாநில எல்லைகளில் நடந்து செல்பவர்களையும் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பணி வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தொடரும். கோவை அரசு மருத்துவம னையில் கொரோனா சோதனைக் கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள் ளது. கோவை அரசு மருத்துவமனை யில் கொரோனா அறிகுறி இருந்த 5 பேரில் 3 பேருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. ஞாயிறு காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை வீட்டில் இருக்க பிரதமர் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்கள் ஊரடங்கிணை வெற்றி கரமாக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.