districts

img

சூரிய சக்தி பம்பு செட்டுகளை மானியத்தில் வாங்கி பயன்பெறுக! விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தேனி, டிச.31- முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அமைக்  கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு களின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன் செய்தியாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பூமலைக்குண்டு ஊராட்சி யில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு  செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.86 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட் டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு மற்றும்  சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.2.59  லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.வி.முரளீதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் கூறுகையில்,  வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் முதலமைச்சரின் சூரிய சக்தி  பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ்  முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு சட்டு கள் மூலம் மின் இணைப்பு இல்லாமல் பக லில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடை யில்லா மின்சாரம் பெறமுடியும். விவசாயி களுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத் தின் கீழ் தமிழக அரசின் மானியம் 40 சத வீதம் மற்றும் திய அரசின் மானியம் 30 சத வீதம் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 எச்.பி (5HP) அள வுள்ள டி.சி மோட்டார் (100மீட்டர் வரை)  பெற்றிட மொத்த தொகையான ரூ. 2,73,548-க்கு 70 சதவீதம் மானியமான ரூ.1,86,896/-மும், 7.5 எச்.பி HP) அளவுள்ள டி.சி மோட்டார் (100மீட்டர் வரை) பெற்றிட  மொத்த தொகையான -81,736-க்கு 70 சதவீத  மானியமான ரூ.2,59,764-மும். 10 எச்.பி (10HP) அளவுள்ள டி.சி மோட்டார் மீட்டர் வரை) பெற்றிட மொத்த தொகையான ரூ.4,58,261-க்கு 70 சதவீத மானியமான 59.764-மும் வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் 5 எச்.பி (SHP) மோட்டார் 35 எண்கள் இலக்கீடும், 7.5 எச்-  (7.5HP) மோட்டார் 24 எண்கள் இலக்கீடும், 10 எச்.பி (10HP) மோட்டார் 3 எண்கள் இலக்கீடு என மொத்தம் 62 எண்கள் தற்போ தைய நிதியாண்டிற்கு மட்டும் வழங்கிட ரூ.140.17 லட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்  பட்டு, தற்போது வரை 43 பயனாளிகளுக்கு ரூ.88.02 லட்ச மானியத்தொகை வழங்கப் பட்டுள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள நீர்நிலை பாதுகாப்பான (Safe Firka) பகுதிகள் கொண்ட விவசாயிகள் மற்றும் ஆயில் இன்ஜின் பயன்பாடு உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தேனியில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி  உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்கள், செய்தியாளர்கள் உடனிருந்தனர்.