மயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பல்வேறு துறை சார்ந்த தேவைகளை ஒரே இடத்தில் பெற வசதியாக தங்களது நில விவ ரங்களை வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் வேளாண் அடுக்க கம் திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கேட்டுக்கொண் டுள்ளார். வேளாண் அடுக்ககம் என்ற திட்டம் ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள் ளது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவ சாயிகள் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங் களை அனைத்து விவசாயிகளும் பயன் படுத்திக் கொள்ள ஏதுவாக விவசாயி களின் அடிப்படை புள்ளி விவரங்களை சேக ரிக்கும் பணியில் வருவாய் மற்றும் வேளா ண்மைத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவ சாயிகள் அனைவரும் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளா ண்மை அலுவலர்களை அணுகி அவர்களி டம் தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், புகைப்படம் மற்றும் நிலவு டைமை விவரங்களை ‘‘AGRISTACK/GRAINS’’ என்ற செயலியில் பதிவேற்றம் செய்வதன் மூலம் இனிவரும் காலங்களில் விவசாயிகள் தங்களது அனைத்து தேவை களையும் ஒரே இடத்தில் பெற்று பயனடை யலாம் என தெரிவித்துள்ளார்.