கோவை, ஜூன் 20 – கோவையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 6 பேர், பெண் கள் 5 பேர் ஆவர். கோவை மைலம்பட்டி, காந்திபுரம், செளரிபாளையம் ஆகிய பகுதிகளில் தலா இருவர், பொள்ளாச்சி, பெரிய கடைவீதி, ராஜவீதி, அன்னூர் ஆகிய பகுதிகளை சார்ந்த தலா ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் களில் இருவர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள். இதே போல், சென்னை அருகே உள்ள வாலஜபாத்திற்கு மரண வீட்டிற்கு சென்று வந்த இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கோவை காந்திபுரம் ஜிஆர்டி நகைக் கடைக்கு சென்னையில் இருந்து வந்த 30 ஊழியர் களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதன் முடிவு ஒரிரு நாளில் வரும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.