சிபிஎம் மூத்த தலைவரும், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னோடியுமான டி.லட்சுமணன் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபனத் தலைவர் எம்.ஆர்.அப்பனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் சனியன்று அரசு ஊழியர் சங்க கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.குமார், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.அருணகிரி, மாநில துணைத் தலைவர் எஸ்.சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.மதன் மற்றும் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.