states

img

மேற்கு வங்கம்: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சீல்டா இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 80க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்பு. 54 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.