திருப்பூர், ஜூன் 2 -திருப்பூர் மிஷின் வீதி கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்புக்கு குளிர் பானம் வழங்கப்பட்டது. மாதர் சங்கத்தின் கிளைச்செயலாளர் காயத்ரி, மாவட்ட செயலாளர் பவித்ரா, ஷகிலா, பானுமதி, வாலிபர் சங்கத்தின் சார்பில் கிளைச் செயலாளர் செல்லமுத்து, தெற்கு மாநகர செயலாளர் ஞானசேகர், நகர தலைவர் சஞ்சீவ், நகர துணைச் செயலாளர் ஜீவா, நகர கமிட்டி உறுப்பினர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.