திருப்பூர், மே 15 – பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், புதிய டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலா ளர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கக் கிளைத் தலைவர்கள் கனகராஜ், செந்தில்குமார் ஆகி யோர் தலைமை ஏற்றனர். பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி கணேசன் தொடக்க உரை ஆற்றி னார். இதில் ஒப்பந்தத் தொழி லாளர் சங்க நிர்வாகி சுந்தரக்கண் ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கச் செயலாளர் என்.குமரவேல், மாவட் டத் தலைவர் முகமது ஜாபர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க நிர்வா கிகள் ரமேஷ், அருண் தேவசகாயம், முத்துக்குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செய லாளர் எஸ்.சுப்பிரமணியம் ஆகி யோர் உரையாற்றினர். இதில் 30க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலத்தில் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் கோபால், ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.