tamilnadu

டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் - காவல்துறையை கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்பு

கோவை, நவ. 3- டெல்லியில் வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி திங்களன்று (இன்று) நீதிமன்ற புறக்கணிப் பில் ஈடுபட உள்ளதாக தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறி ஞர்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.  இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடை பெற்றது. இதில் தமிழக புதுச்சேரி வ்ழக்கறிஞர் சங்கங்க ளின் கூட்டுக்குழு தலைவர் நந்த குமார் கூறுகையில், டெல்லியில் உள்ள ஹாசாரி நீதிமன்ற வளாகத்தில் கடந்த  2 ஆம் தேதி வழக்கறிஞர்களை காவல் துறையினர் தாக்கிய தோடு, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இதில் காய மடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே  தாக்குதல் நடத்திய சம்பவத்தை தமிழக மற்றும் புதுச் சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு வன்மையாக கண் டிப்பதாக அதன் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். மேலும் வழக்கறிஞரை தாக்கிய காவல் துறையினரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். காவல் துறையின் இத்தகைய அராஜக நடவடிக்கையை கண்டித்து  திங்கள் கிழமை ஒரு நாள் மட்டும் தமிழக கீழமை நீதி மன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பார்கள் என தெரிவித்தார்.