கோவை, ஜூன் 1–கோவையில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சனை மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜூன் 7-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சனியன்று வடகோவையில் உள்ள திமுக மாவட்டதலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா.ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, வடக்கு நகரசெயலாளர் என்.ஆர்.முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால்,விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுசி.கலையரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்காளர்களுக்கு நன்றி
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு. கோவை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட பி.ஆர்.நடராஜனை ஒரு லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றிதெரிவிக்கப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் தேக்கம்அடைந்துள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
இதேபோல், குடிநீர் மேம்பாட்டுபணிகள் செய்யாத காரணத்தாலும்சீரற்ற குடிநீர் விநியோகத்தாலும் கோடைகாலம் முடிவுறும் தருவாயிலும் கோவை மாநகரில் பொதுமக்கள் குடிநீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல பகுதிகளில் பத்து நாட்கள், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. எனவே,மாநகராட்சி நிர்வாகம் போர்க்காலஅடிப்படையில் செயல்பட்டு மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேம்பால பணி முடக்கம்
மேலும், கடந்த 2010-ம் ஆண்டுதமிழக முதலமைச்சராக இருந்தகலைஞர் கருணாநிதி சிங்காநல்லூர்எஸ்ஐஎச்எஸ் காலனியில் 23 கோடிரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கானஅரசாணையை வெளியிட்டார்.இந்நிலையில், கடந்த 2011-ம்ஆண்டு மேமாதம் ஆட்சிக்குவந்த அதிமுகஅரசு எஸ்ஐஎச்எஸ்காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்குண்டான சம்பந்தப்பட்ட இடங்களில் வசித்துவந்த இடஉரிமையாளர்களிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் முறையாக நடத்தாமல்தான்தோன்றித்தனமாக மேம்பாலபணிகளைத்துவக்கியது. குறிப்பாகமேம்பாலத்தை ஒட்டி வருகின்றஅணுகுசாலைக்கு (ளுநசஎiஉந சுடியன)தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமல் கட்டுமானப் பணிகளைமேற்கொண்ட காரணத்தால்,நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், மேம்பாலக் கட்டுமானப் பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன்பின்னரும் மாவட்ட நிர்வாகம் அந்த மக்களை அழைத்துபேசி சுமூகமான தீர்வு காணாமல் இழுத்தடித்து வருகிறது. இதனால்ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்துக்கு வேறு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் என்ற ஒரே காரணத்தால், காழ்ப்புணர்ச்சியோடு இந்த காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை அரசு நிர்வாகம் முடக்கி வருகிறது. ஆகவே, இத்தகைய போக்கினை கண்டித்து வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.