tamilnadu

‘மக்கள் ஒற்றுமையை உருவாக்க முன்னணியில் நின்றவர் யு.கே.சிவஞானம்’

சென்னை,அக்.6- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள்  மாநிலப் பொருளாளர் யு.கே.சிவஞானம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சங்கத்தின் மாநிலக்குழு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு

17 ஆண்டு காலம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தன்னை முழு நேர ஊழியராக இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் தோழர் யு.கே.சிவஞானம்.  

வாலிபர் சங்கத்தின் வலுமிக்க செயல்பாட்டை மேற்கு மண்டல மாவட்டங் களில் உருவாக்குவதற்கு இடையறாத பணிகளை மேற்கொண்டவர். தற்போதும் வாலிபர் சங்கத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு ஏராளமான உதவிகளைச் செய்து வந்தார். 

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட மக்களின் அடிப்படை கோரிக்கை களுக்காவும், மக்கள் ஒற்றுமையை உரு வாக்கும் களச்செயல்பாட்டிலும் முன்னணி யில் நின்றவர்.  

போராட்டத்தில் கைதாகி கோவை  மத்திய சிறையில் இருந்தபோது சிறைச்சாலைக் குள்ளே வாலிபர் சங்கக்கொடியை ஏற்றிய  பெருமை உடையவர். 

அவரது மறைவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.