வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரிக்க பயிற்சி
சென்னை, மே 8- சென்னையில் தொழில் முனைவோருக்கு மே 14 முதல் 3 நாட்கள் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில், வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற் சாலைக்கு உதவும் ரசாயன பொருட்கள் தொடர்பான பயிற்சி மே 14 முதல் 16ஆம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது. இப்பயிற்சியில் கருப்பு பினாயில், கட்டிங் ஆயில், கிரீஸ், தொழில்துறை சோப்பு எண்ணெய், பைப் கிளீனிங் பவுடர், வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ்வாஷ் சோப்பு, டிடர்ஜென்ட் சோப்பு, டெட்டால், எஸ்எஸ்- மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ் மற்றும் இன்டஸ்ட்ரியல் ஃப்ளோர் கிளீனிங், ஃப்ளோர் கிளீனர், டிஷ்வாஷ் திரவம், சோப்பு திரவம், பேப்ரிக் சாப்ட்னர் & கண்டிஷனர், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழி முறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் ஆர்வ முள்ளவர்கள் (ஆண் / பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி யாளர்கள் விண்ணப்பிக்க லாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளி ரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்பு வோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்வதற்கு முன்பதிவு அவ சியம். இப்பயிற்சியில் சேர்வோ ருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.