tamilnadu

img

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுத் தாக்கல்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவர் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அமலாக்கத்துறை எந்த தகவலும் அளிக்காமல் சட்டவிரோதமாக செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாகவும், இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு தெரிவித்துள்ளது.