வேலூர், செப். 6- செங்கல் சூளையில் கொத்தடிமைத் தொழிலா ளர்களாக இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் பார்த்தி பனுக்குச் சொந்தமான செங்கல் சூளை யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள், 8 வயது சிறுவன் உள்பட 5 பேர் கொத் தடிமைகளாக வேலை செய்து வருவதாக ராணிப் பேட்டை சாராட்சியர் அலு வலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சாராட்சி யர் க.இளம்பகவத் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினார். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மானாம்பதி பகுதியைச் சேர்ந்த சண்முகம் (42), அவ ரது மனைவி அஞ்சலி (37), மகன் தினேஷ் (8), சண்முகத் தின் தம்பி ரமேஷ் (38), அஞ் சலியின் தங்கை செல்வி (38), ஆகிய 5 பேரும் ரூ. 1 லட்சம் கடனுக்காக செங்கல் சூளையில் வேலை செய்து வருவதாகவும், இவர்க ளுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.525 வழங்கப்பட்டு வந்த தாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர் களை மீட்ட சாராட்சியர் க. இளம்பகவத் தனது அலுவ லகத்துக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து, அவர்களுக்கு கொத்தடிமை விடுதலைச் சான்று வழங்கி, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற் கொண்டார். மேலும், செங் கல் சூளை உரிமையாளர் பார்த்தீபன் மீது உரிய நட வடிக்கை எடுக்க உத்தர விட்டார்.