நூலகம் அமைக்க தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆய்வு
மயிலாப்பூர் பகுதி, வள்ளீஸ்வரன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள காலியிடத்தில் நூலகம் அமைக்க வலியுறுத்தி தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் மனு அளித்தார். இதனைதொடர்ந்து அந்தப் பகுதியை ஆய்வு செய்த அவர், உடனடியாக நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வின்போது த.வேலு எம்எல்ஏ, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
