tamilnadu

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மகேஸ்வரி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடாஜலபதி, வட்ட செயலாளர் ராமர், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், வட்டத் தலைவர் சிவக்குமார், ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவர் டி.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.