tamilnadu

img

மூடநம்பிக்கைப் பேர்வழியை கைதுசெய்ய வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை, செப். 6 - மூடநம்பிக்கையைப் பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும் பேசியதுடன், மாற்றுத் திற னாளி ஆசிரியரை மிரட்டிய, ‘பரம்பொருள் பவுண்டேசன்’ அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தமது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஆன்மீகம், பக்தி பெயரில் பரப்பப்படும் மூடநம்பிக்கை!

அரசுப் பள்ளிகளில் ஆட்சேபகரமாக வும், அறிவியலுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லாத மூடக்கருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதற்கு வலுவான எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன.  

ஆன்மீகம், பக்தி என்ற பெயரால் அறி வியல் கண்ணோட்டங்களை பலவீனப் படுத்தி, பள்ளி மாணவ - மாணவியரி டையே பழமைவாத மற்றும் மூடக்கருத்தி யலைக் கொண்டு செல்லும் வகையில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு  நிகழ்ச்சியில் ‘பரம்பொருள் பவுண் டேஷன்’ என்ற அமைப்பின் சார்பில் பங் கேற்று பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் அறிவியலுக்குப் புறம்பான அபத்தமான கருத்துக்களை உள்ளடக்கிய உரையை பள்ளி மாணவர்களி டம் பகிர்ந்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் மாற்றுத் திற னாளி ஆசிரியர் ஒருவர் அவ ரது உரைக்கு ஆட்சேபணை தெரிவித்தபோது, அந்த ஆசிரியரையும் அனைவரின் முன்னிலையிலும் மிகவும்  தரக்குறைவான வார்த்தையில் பேசிய தோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியின் பேரிலேயே, பள்ளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்று உரையாற்றுவதாகவும் அந்த பேச்சாளர் அவரை மிரட்டியுள்ளார்.

அறிவியலுக்குப் புறம்பான ஆபாசமான சொற்பொழிவு

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்னால் வேறு ஒரு அரசு மேல்நிலை பெண்கள் பள்ளியிலும் சம்பந்தப்பட்ட இதே நபர் சுமார் நான்காயிரம் மாணவி களிடம் உரையாற்றும்போது “மாணவி கள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவி களில் செய்த பாவம், போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத் தில் மாற்றுத் திறனாளிகளாகவும், ஏழை களாகவும் பிறக்கிறார்கள், கை, கால், கண்பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள் தான் காரணம் என்றும், இது போன்று பல்வேறுவிதமான மூட நம்பிக்கைகளை விதைக்கும் வகை யிலும், ஆபாசமாகவும் உரையாற்றி யிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படியான நிகழ்ச்சியை எப்படி நீங்கள் அரசுப் பள்ளியில் நடத்தலாம் என பெற்றோர் மாணவர் கழகத்தின் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்த போது, ‘அது ஒரு நன்னெறி நிகழ்ச்சிதான், எனவே அதில் ஒன்றும் தவறில்லை’ என  பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட் டோர் தெரிவித்திருக்கின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து தான் நடக்கிறதா?

தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதும், மூடக்கருத்துக்களை பரப்புவதும் மிகவும் ஆபத்தானதாகும்.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளி யான பின்னணியில் பள்ளிக் கல்வித்துறை ஒரு குழுவை அமைத்து நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள முன்வந்திருப்பதாகவும், தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகள், அரசு பள்ளிகளில் நடத்தப்படுவது குறித்து  பள்ளிக் கல்வித்துறையோ, அல்லது அரசு  உயர் அதிகாரிகளோ அறிந்திருக் கிறார்களா, அவர்கள் அனுமதியோடு தான்  இத்தகைய நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடைபெறுகிறதா? என பல சந்தேகங்கள் இப்பிரச்சனையை சுற்றி எழுகிறது.

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளதா?

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக் களை அரசுப் பள்ளிகளில் கொண்டாட வேண்டுமென்று சுற்றறிக்கை வெளி யிடப்பட்டதாக செய்திகள் வந்தன. தற்போது ‘தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி’ என்ற போர்வையில் அறி வியலுக்குப் புறம்பாகவும், வாழ்வியல் நெறிகளுக்கு விரோதமாகவும், மாணவர்களின் நெஞ்சங்களில் நஞ்சை  விதைக்கும் வகையிலும் ஆன்மீக  சொற்பொழிவுகள் அரசுப்பள்ளிகளில் நடைபெறுகின்றன. இது கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

தனியார் பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது அரசுப் பள்ளி களில் மூடக்கருத்துக்களை பரப்பும்  வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இந்நிகழ்வுகளால் பள்ளி கல்வித் துறை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையோ என்கிற ஐயம் எழுகிறது.

கடும் நடவடிக்கை  எடுத்தாக வேண்டும்!

எனவே, அதிக பணத்தை செலவழித்து  இந்த மூடநம்பிக்கை பேச்சாளரை அழைத்து சொற்பொழிவு நிகழ்ச்சியை முன்னெடுத்த மாவட்ட முதன்மை கல்வி  அலுவலரையும், தலைமையாசிரியரை யும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்; இச்சம்பவம் குறித்து முழுமை யான விசாரணை நடத்தி கல்வித்துறை யில் உயர் பொறுப்பில் உள்ள அதி காரிகள் முதற்கொண்டு அனைவரின் மீதும்  பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவிகள் மத்தியில் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையிலும், ஆபாசமாகவும் பேசிய பேச்சாளர் மகா விஷ்ணுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திட வேண்டும்; முற்போக்கான அறிவியலுக்கும், கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முற்றாகத் தடுப்பதற்கு உயர் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.