tamilnadu

img

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை குற்றவாளி தற்கொலை!

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி விவேகானந்தன், காலாப்பட்டு மத்திய சிறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, மார்ச் 2-ஆம் தேதி மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அச்சமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து 5-ஆம் தேதி சிறுமி வீட்டின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் விவேகானந்தன் (57), கருணாஸ் (17) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விவேகானந்தன், காலாப்பட்டு மத்திய சிறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பு: உலகில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல.. தற்கொலை எண்ணம் தோன்றினால், தனிமையில் இருப்பதை தவிர்க்கவும். உடனடி மனநல ஆலோசனைக்கு மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.