tamilnadu

img

தரணி சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 4- திருவண்ணாமலை மாவட்டம் போளூ ரில் உள்ள தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம்  தொழிலாளர்களுக்கு நான்கு மாத காலமாக ஊதியம் வழங்காததைக்  கண்டித்தும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலு வைத் தொகையை வழங்கக் கோரியும்  போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தரணி சர்க்கரை  ஆலை எம்ப்ளாயிஸ் யூனியன் செயலாளர் எஸ்.தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதற்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வட்டாட்சியர் பா.ஜெயவேலு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே. காங்கே யன், பாரி, தரணி சர்க்கரை ஆலை எம்ப்ளா யிஸ் யூனியன் துணைத் தலைவர் பாலமுரு கன் பொருளாளர் ஜோதி, ஆலை நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இதில் 10ஆம் தேதி முத்தரப்பு  பேச்சு வார்த்தை நடத்துவது என்றும் அதற்குள்  தொழிலாளர்களுக்கு ஊதியத்தை அளிப்ப தாகவும் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப் பட்டது.