tamilnadu

img

தமிழ்நாடு காவல்துறையின் செயலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்.

சென்னை,அக்.05- சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய இடதுசாரி கட்சியினரை காவல்துறை கைது செய்துள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டணம் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறது சாம்சங் நிறுவனம். பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமையையும், அரசியல் சட்டத்தையும் ஒரு சேர அவமதிப்பதற்கு எதிராக தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் வரவேண்டிய கோபம், அந்த சட்ட மீறலுக்கு எதிராக போராடுகிற கம்யூனிஸ்டுகளின் மீது ஏன் வருகிறது? 
இடதுசாரி தலைவர்களை கைது செய்துள்ள தமிழக காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது. பன்னாட்டு நிறுவனங்களின் மீதான விசுவாசத்தை வெல்லும் வலிமை உழைக்கும் மக்களிடம் என்றும் உண்டு. என இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.