tamilnadu

மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு அதிகாரி

சென்னை, ஜூன் 5-தமிழகத்தில் கிடப்பிலுள்ள மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அவற்றிலுள்ள சிக்கல்களை களையவும், மத்திய அரசுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித் துள்ளது. ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை விரிவாக்கம், பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் பொது மக்களின் எதிர்ப்பு, வழக்குகள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட காரணங்களால், இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.இந்த சிக்கல்களை களைவதற்காகவும், மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தும் பொருட்டும், தமிழக சுற்றுச் சூழல் துறை சார்பில் புதிய அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த பொறுப்புக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட் டுள்ளார். இதற்காக பிரத்யேகமாக தில்லியில் உள்ள தமிழக இல்லத்தின் இணையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய இணையதளத்தையும் இவர் கண்காணிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.