புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு
சென்னை சிந்தாதரிப்பேட்டையில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கோஷன் மண்டபம் கிளை நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, பொது நூலகத்துறை இயக்குநர் ச.ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
