ஒன்றிய அரசை எதிர்த்து விழுப்புரத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்
விழுப்புரம், ஜூன் 20- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் மக்கள் நலக் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் சிபிஎம் சார்பில் விழுப்புரம் நகரத்தில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்க த்திற்கு மேகநாதன், ரஞ்சித் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் நிறைவு செய்து வைத்தார். காணை ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ. ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார். இந்தப் பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பிரகாஷ், பி.சிவராமன் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பிரச்சார இயக்கம் காண்கையில் தொடங்கி கெடாரில் நிறைவுபெற்றது. மேல்மலையனூர் இடை கமிட்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் எழில் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், மாவட்டக் குழு உறுப்பினர் இலக்கிய பாரதி, இடை கமிட்டி செயலாளர் ஹரிஹர குமார் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். காணை திருவெண்ணெய் நல்லூர் வட்டம், காரப்பட்டு கிரா மத்தில் வட்டச் செயலாளர் கே.சிவக்குமார் தலைமையில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் தொடங்கியது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். வட்டக்குழு உறுப்பி னர்கள் கோவிந்தராஜ், பழனி, தட்சணாமூர்த்தி, பால கிருஷ்ணன், மணிகண்டன், பூரணி மற்றும் கிளைச்செய லாளர்கள் அனைவரும் 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காரப்பட்டு, இரு வேல்பட்டு, அரசூர், காந்தல வாடி, மடப்பட்டு, மாதம்பட்டு, தடுத்தாட் கொண்டூர், மழையம்பட்டு, சரவணப்பாக்கம், பெரிய செவலை, ஆமூர், மணக்குப்பம் என 21 மையங்களில் துண்டுப்பிரசுர விநியோகமும் விரிவான பிரச்சாரமும் நடை பெற்றது. இறுதியாக திரு வெண்ணெய்நல்லூர் பேரூ ராட்சி கடைவீதியில் நடை பயண மாக சென்று வட்டாட்சியர் அலு வலகம் அருகே தெருமுனைக் கூட்டத்துடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.