திருவண்ணாமலை, மார்ச் 25- 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் திருவண்ணாமலை நகரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக திரு வண்ணாமலையிலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுபவர்கள், கல்லூரிகளில் தங்கி பணிபுரியும் மாணவ, மாண வியர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்தனர். மார்ச் 31 ஆம் தேதி வரை வீடு களில் இருக்க வேண்டும் என்பதால், மளிகை பொருள்களை வாங்க பொது மக்கள் மளிகை, காய்கறி கடைக ளில் குவிந்தனர். அதை தொடர்ந்து பால், மருத்துவம், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கள் தடையின்றி கிடக்கும் என, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டதால் சற்று ஆறுதலடைந்தனர்.
ஆனால், புதன்கிழமை காலை திருவண்ணாமலை நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. ஏற்க னவே திருவண்ணாமலை உழவர் சந்தை மூடப்பட்ட நிலையில், கட லைக்கடை மூளை, காய்கறி சந் தைக்கு மக்கள் சிலர் சென்றனர். அங்கு வியாபாரிகளும், விவசாயி களும் காய்கறிகளை விற்க தொடங்கி னர். அதற்குள்ளாக அங்கு வந்த போலீசார் காய்கறிகளை இங்கு விற்கக்கூடாது என, எச்சரித்து கடை களை மூடச் செய்தனர். இதனால், காய்கறி கிடைக்காமல் மக்கள் தவித்தனர். பின்னர், வீடுகளில் கொண்டு சென்று காய்கறிகளை விற்குமாறு போலீசார் அறிவுரை செய்தனர். நக ரில் மீன் கடைகள் மற்றம் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தது. அங்கு பொது மக்கள் கூட்டமாக சென்று மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கினர். மளிகை, காய்கறி பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, வியாபாரி கள் காய்கறிகளையும், மளிகை பொருட்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்தனர். வரும் நாட்க ளில் பொருட்கள் தட்டுப்பாட்டை போக்கி, உரிய விலைக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.