விழுப்புரம், மார்ச் 7- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாவட்ட மாநாடு எம்.ஐ.அலாவுதீன் தலை மையில் விழுப்புரத்தில் நடைபெற்றது, மாநிலச் செயலாளர் மூசா மாநாட்டை துவக்கி வைத்தார், மாவட்டச் செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட தலைமை ஹாஜி முகமது அஸ்ரப் அலி உலவி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, தலித் முன்னுரிமை கூட்டமைப்பு தலைவர் சீ.நிக்கோலஸ் கிறிஸ்துவ சிறு பான்மை மக்கள் தலைவர் கே.வின்சென்ட், முத்தவல்லி பள்ளிவாசல் முகமது யூனஸ், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா, வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.அறிவழகன், வழக்கறிஞர் கண்ணப்பன், வானூர் வட்டத் தலைவர் வி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய மாநில அரசுகள் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு குடி நீர், சாலை வசதி, கழிப்பறை, காங்கிரீட் வீடு கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும், தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறுபான்மை பெண்க ளுக்கு சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட பயிற்சிக்கு ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் என்பதை 5 லட்சமாக உயர்த்த வேண்டும், உதவித் தொகையை ரூபாய் 150இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கல்வி உதவித்தொகை பெற பெற் றோரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் 10 லட்ச மாக உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, புதிய மாவட்டத் தலைவராக எம்.ஐ. அலாவுதீன், செயலாளராக என்.மேகநாதன், பொருளாளராக ஜான் போஸ்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்ன தாக எம்.எஸ்.ஆர்.தாஜ்தீன் வரவேற்றார்.