சென்னை, ஜூன் 28 தாம்பரம் ராமகிருஷ்ணா தெருவில் அமைந்துள்ள வருமான வரி வர்த்தக சரக அலுவலகத்தில் புதிதாக வருமான வரி சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் பி.முரளிகுமார் புதனன்று (ஜூன் 26) திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள் அனு ஜே. சிங், அரவிந்த்குமார், வருமான வரித்துறை ஆணையர் ஸ்டீபன் ராஜ், இணை ஆணையர் ஜி.என். ராகவேந்திரராவ் (தாம்பரம் சரகம்) மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள், பட்டய கணக்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த சேவை மையத்தில் வரி செலுத்துபவர்களின் மனுக்கள் அனைத்தும் பெறப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மனுக்க ளின் மீதான நடவடிக்கைகள் இணையதளம் வாயிலாக உயர் அதிகாரிகள் கண்காணிக்கமுடியும்.இந்த சேவை மையம் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை (சனி, ஞாயிறு விடு முறை நீங்கலாக) செயல்படும்.