tamilnadu

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை பேரணி

கடலூர், ஜூலை 12- பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஒப்  பந்தத் தொழிலாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பி னர் என்எல்சி தலைமை அலு வலகம் நோக்கி கோரிக்கை பேரணி நடத்தினர். மத்திய பேருந்து நிலை யம் அருகே புறப்பட்ட பேர ணியை தொமுச தலைவர் வீர.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சிஐடியூ ஒப் பந்தத் தொழிற்சங்க பொதுச்  செயலாளர் டி.அமிர்தலிங்  கம் தலைமை தாங்கினார். உச்சநீதிமன்ற உத்தர வின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மீத முள்ள ஒப்பந்தத் தொழிலா ளர்களை இண்கோசர்வ் சொசைட்டியில் இணைக்க  வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.  2ஆவது வட்டம் நேரு  சிலை அருகே வந்த பேர ணியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் மட்டும் தலைமை அலுவலகம் சென்று முதன்மை பொது மேலாளர்  தியாகராஜனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நிர்வாகத்தின் கவ னத்திற்கு கொண்டு சென்று  உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறியுள்ளார். இதில் சிஐடியு தலைவர்  ஏ.வேல்முருகன், பொருளா ளர் எம்.சீனிவாசன், செயலா ளர் பி.கருப்பையன் உள்  ளிட்ட ஏராளமான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.