சென்னை, மே 24-திமுகவில் கருணாநிதிக்கு ஆதரவாக, 29 ஆண்டுகாலம் பணியாற்றியதைப் போலவே, ஸ்டாலினுக்கும் உறுதுணையாக பணியாற்றுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களவை தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் 29 ஆண்டுகள் கருணாநிதிக்கு போர்வாளாக இருந்து செயலாற்றியதைப் போல, மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக நின்று எவ்வித எதிர்ப்பார்ப்பு மின்றி, திராவிட இயக்க கொள்கைகளை காக்க பணியாற்றுவேன் எனக் கூறினார்.