tamilnadu

சென்னை மற்றும் காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

கால்நடைகளுக்கு மருத்துவ உதவி

சென்னை, டிச.20- மக்கள் தொகையில் பெரும் சதவீதத்தினர் கால்  நடைகளை தங்கள் வாழ்வா தாரத்திற்காக நம்பியுள்ள னர். அத்தகைய கால்நடை கள் மற்றும் அதன் உரிமையா ளர்களுக்கு  உதவும் வகை யில் ஃபுல்லர்டன் இந்தியா நிறுவனம் கால் நடை வளர்ச்சி  தினத்தை கொண்டாடியது. இதை முன்னிட்டு  கிராமப்  புற மக்களுக்கு கால்நடைகள்  தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ உதவி வழங்  கப்பட்டது. இந்தாண்டு  14 மாநி லங்களில் பரவலாக உள்ள  350 இடங்களில் அமைந் துள்ள 500க்கும் அதிகமான கிராமங்களில் ஒரே நேரத் தில் கால்நடை முகாம்கள் நடைபெற்றன. இந்த திட்டத்  தின் மூலம் 68,000 கால்நடை கள் மற்றும் 21,000-க்கும் மேற்  பட்ட கால்நடை உரிமையா ளர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டு களில் நடைபெற்ற இத்  திட்டத்தின் மூலம் இதுவரை யில் ஏறக்குறைய 2லட்சம்  கால்நடைகள் மற்றும் 50ஆயி ரத்திற்கும் அதிகமான கால் நடை உரிமையாளர்கள் பய னடைந்திருப்பதாக நிறுவனத்  தின் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.

போலீசாரை தாக்கி கையை கடித்த சாராய வியாபாரிகள்

சென்னை, டிச.20- திருவோணம் அருகே தேடுதல் வேட்டைக்கு சென்றபோது போலீசாரை தாக்கி கையை கடித்துவிட்டு தப்பிச் சென்ற சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகிறார்கள். திருவோணம் அடுத்த புதுவிடுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அமலாக்கப்பிரிவு ஏட்டு செந்தில்குமார், காவலர் ஆல்வின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சாராயம் காய்ச்சிய ராஜூவை போலீசார் கைது செய்தனர். அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் புதுவிடுதியில் ஒரு மறைவான இடத்தில் அருள்பாண்டியன், இளங்கோவன் இருப்பதாக வந்த தகவலின்பேரில் ஏட்டு செந்தில்குமார், காவலர் ஆல்வின் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் திடீரென உருட்டுக் கட்டையால் போலீசாரை தாக்கி கையை கடித்துவிட்டு மீண்டும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் செந்தில்குமார், காவலர் ஆல்வின் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.  இது குறித்து திருவோணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

பயிற்சி முகாமில் வெடிக்காத  குண்டுகள் அழிக்கத் திட்டம்

காஞ்சிபுரம், டிச. 20- காவல்துறை உயரதிகாரிகள் துப்பாக்கி பயிற்சி மையத்தில் துப்பாக்கி பயிற்சி நடை பெற்றபோது வெடிக்காத குண்டுகளை சேக ரித்து வைத்துள்ள வீடுகளிலிருந்து கைப் பற்றப்பட்ட வெடிகுண்டுகளை வெடி வைத்து அழிக்க காவல்துறையினர் திட்ட மிட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே அனுமந்தபுரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் துப்பாக்கி பயிற்சி மையம்  உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் ராணு வம், தமிழக காவல்துறை, ரயில்வே காவல் துறை உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கடந்த  20 ஆண்டுகளாக  துப்பாக்கி பயிற்சி  அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட வெடித்த மற்றும்  வெடிக்காத வெடி பொருள்கள் அனுமந்த புரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் விழுந்து கிடக்கும். அவற்றை அந்தப் பகுதி  மக்கள் சேகரித்து அதில் உள்ள உலோ கங்களைப் பிரித்து எடுத்து விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இந்த வெடிகுண்டுகள் திருப்போரூர் அருகே உள்ள மானாம்பதி ஏரிக்கரையில் அழிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்  கான நீதிமன்ற உத்தரவையும் போலீஸார் பெற்றுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கூறினார். அனுமந்தபுரம் பகுதியில் 104 வெடி குண்டுகள் சிக்கின. இவற்றில் ஏற்கனவே வெடித்த குண்டுகளும், வெடிக்காத குண்டு களும் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து அழிக்க திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே குண்டுகளை அழிக்கப் பயன்ப டுத்தும் பகுதியான மானாம்பதி ஏரியில்  வெடி குண்டு வைத்து அழிக்க உள்ளோம் என்றார்.