சென்னை, பிப். 23- ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான 2020 - 2021ஆம் ஆண்டு உயிர் சான்றிதழ், சரிபார்க்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து 2020-2021ஆம் ஆண்டிற்கான உயிர் சான்றுகள் 2020 மார்ச் மாதம் 2 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியப் பிரிவில் பெற்றுக் கொள்ளப்படும். உயிர் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய மாதம் 31.12.1979 வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் (ம) குடும்ப ஓய்வூதியம் மார்ச் 2020க்குள்ளும், 1.1.1980 முதல் 31.12.1989 வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் (ம) குடும்ப ஓய்வூதியர்கள் ஏப்ரல் 2020க்குள்ளும், 1.1.1990 முதல் 31.12.1999 வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் (ம) குடும்ப ஓய்வூதியர்கள் மே 2020க்குள்ளும், 1.1.2000 முதல் பிப்ரவரி 2019 வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் (ம) குடும்ப ஓய்வூதியர்கள் ஜூன் 2020க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2018 படிவத்தை இதுநாள் வரை அளிக்காதவர்கள் உயிர் சான்று சமர்ப்பிக்க வரும்போது வழங்குமாறும், ஓய்வூதியராயிருப்பின் கணவர் / மனைவியுடனான புகைப்படம் (இணைந்த போட்டோ) மற்றும் இருவரின் ஆதார் அட்டை நகல்கள், குடும்ப ஓய்வூதியராயிருப்பின் தனது புகைப்படம் 2 எண்ணிக்கை மற்றும் ஆதார் அட்டை நகல்களு டன் வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.