சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத முதலீடுகள் குறித்து தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில், அந்த புகார்களின் அடிப்படையில் புதன்கிழமை காலை முதல் சென்னை புரசைவாக்கம், தி.நகர், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறை சோதனை காரணமாக கடைக்குள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.