tamilnadu

img

போக்குவரத்து சம்மேளன மாநில மாநாட்டையொட்டி சென்னையிலிருந்து ஜோதிகள் பயணம்

  சென்னை,ஜூலை 16- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டையொட்டி சென்னையிலிருந்து மூன்று நினைவு ஜோதிகள் திங்களன்று (ஜூலை 15) கொண்டு செல்லப்பட்டன. அரசாங்கப் போக்கு வரத்து ஊழியர்களின் மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில்  ஜூலை 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நடைபெறு கிறது. இந்த மாநட்டையொட்டி,  வடசென்னையிலிருந்து தொழிற்சங்க மாமேதைகள் சிங்காரவேலர், சக்கர செட்டியார், வி.பி சிந்தன்,  ஆகியோரின் நினைவாக ஜோதிகள் கொண்டு செல்லப்பட்டன.  இந்நிலையில் திங்க ளன்று (ஜூலை 15)  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சிலை அருகில்  சிஐடியு மூத்த தலைவர் வீர அருண் சிங்காரவேலர் நினைவு ஜோதியை எடுத்துக் கொடுத்தார். இதை போக்குவரத்து துணை பொதுச் செயலாளர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.  இதனைத் தொடர்ந்து ஓட்டேரி மயானத்தில் உள்ள வி.பி.சிந்தன் நினை விடத்தில், சிஐடியு வட சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை வி.பி.சிந்தன் நினைவு ஜோதியை  எடுத்து கொடுக்க  துணைத் தலை வர் கே.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். அதேபோல், குக்ஸ்சாலையில் உள்ள ஏ.பி.நினைவகத்திலிருந்து சக்கரசெட்டியார் நினைவு ஜோதியை சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன் எடுத்துக் கொடுக்க, சம்மேளன துணைத் தலை வர் மதிவாணன் பெற்றுக்கொண்டார். பின்னர் வடசென்னை யில் துவங்கிய மூன்று நினைவு ஜோதி பயணக் குழுக்கள் பல்லவன் இல்லத்தில் சென்று சம்மேளன நிர்வாகிகள் ஏ.பி. அன்பழகன், எம்.சி.சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோ ரிடம்  ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் பாண்டி (தண்டையார்பேட்டை), செங்குட்டுவன், ராஜேந்திரன் (திருவொற்றியூர்), கிருபா (வியாசர்பாடி), தங்கராஜ் (பெரம்பூர்), சண்முகராஜ் (மாதவரம்), நூர்முகமது (பேசின்பாலம்), நிர்வாகிகள்  பாலாஜி, ஐ.கே.மணி, சுப்பிர மணி(அண்ணாநகர்), ரவி சங்கர்(ஆவடி), பாபு (ஆவடி)ஆகியோர் பங்கேற்றனர்.