சென்னை, அக்.13- மதப்பகைமையையும் மதக்கல வரத்தையும் தூண்டும் வகையிலான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
விஜயதசமியையொட்டி நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரை மதப்பகைமை யையும் மதக்கலவரத்தையும் திட்ட மிட்டு தூண்டும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அனைத்து சமூக மக்களுக்கு இடையே யான நல்லிணக்கம், இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு, ஒருங்கிணைந்த வளர்ச்சி என மேலெழுந்த வாரியாக பேசுவதும்; ஆனால், அதே சமயத்தில் மதவெறி நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலைப் பின்பற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என இரட்டை வேடம் போடுகிற ஆர்.எஸ்.எஸ் பாணியை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தன்மையிலேயே அதன் தலைவரது உரை அமைந்திருக் கிறது.
நமது நாட்டை பாதுகாக்க மத அடிப்படையில் நாம் ஒன்றுதிரள வேண்டும் எனும் அவரது கோரிக்கை, மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய நூல்களின் உள்ளடக்கங்களையே மீண்டும் வெளிப்படுத்துகிறது. இந்தியா என்பது இந்துக்களுக்கான தாய்நாடு எனவும் இங்கு சிறுபான்மை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ வேண்டுமானால் “பாரதப் பண்பாட்டை” ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; இல்லையெனில் அவர் களுக்கு இந்நாட்டில் இடமில்லை என எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய ‘நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசியம்’ எனும் புத்தகத்தின் பக்கங் களை மீண்டுமொருமுறை வாசித்ததைப் போலவே விஜயதசமி விழாவில் மோகன் பகவத் இப்போது பேசியிருக்கிறார்.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் வன்முறைகள்
நமது நாட்டின் அடிப்படையான மதச் சார்பின்மைக் கோட்பாட்டை முன் னெடுக்கும் அரசியல் கட்சியினரை ‘சுயநலமிகள்’ என்றும் அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வும் மோகன் பகவத் பேசியிருப்பது மிக வும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களில் மதரீதியான மோதல்கள் நடை பெறுவதாகவும் பதற்றமான நிலைமை நீடிப்பதாகவும் கற்பனையான கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அவரது இத்தகைய பேச்சு கடும் கண்டனத்துக்குரியதாகும்.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத நல்லிண க்கமும், ஒருமைப்பாடும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மாறாக பாஜக ஆளும் மாநிலங்களில் தான் கும்பல் படுகொலைகள், பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்; சிறுபான்மை யினர் மீதான தாக்குதல்கள், அவர் களது வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலும், புல்டோசர் இடிப்புகளும் அன்றாட நடவடிக்கைகளாக இருக்கின்றன என்பதை மோகன் பகவத் வசதியாக மறைக்கிறார்.
மேலும் அவரது உரையில், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கோ, அவர்களது வழிபாட்டிற்கோ ஏதேனும் ஒரு சிறு இடையூறு வந்தாலும் அரசை அணுகாமல், சட்ட நடைமுறை களையும் பின்பற்றாமல் தாங் களாகவே களத்தில் இறங்கி தங் களுக்கான நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் எனும் அவரது அறை கூவல், மதவெறி மோதல்களை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது.
நமது கல்வி நிலையங்களில் போதிக்கப்படும் பாடத்திட்டங்கள் ‘மதச்சார்பற்ற தன்மையை’ அடிப் படையாகக் கொண்டிருப்பதால், அவற்றை முற்றாக நிராகரித்து பாடத்திட்டங்களை அடியோடு மாற்ற வேண்டும் எனவும் கல்வி வளாகங்களை கைப்பற்ற வேண்டு மெனவும் வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். மோகன் பகவத்தின் இத்தகைய விருப்பத்தை ஒன்றிய அரசாங்கமும், பாஜக ஆளும் மாநி லங்களும் நிறைவேற்றிக் கொண்டி ருப்பதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.
மதரீதியான அரசியலே மோதல்களுக்கு காரணம்
வங்கதேசத்தில் ஒரு சில இடங்களில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்பு படுத்தி, இந்தியாவிலும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும் குற்றச்சாட்டை அவர் முன் வைக்கிறார். அந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆனால், மதரீதி யான அரசியல் தான் இத்தகைய மோதல்களுக்கு காரணம் என்பதை யும், அத்தகைய மதவெறி அரசியல் நடவடிக்கைகளை நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுப்பதால்தான் இங்கும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வெறுப்பைக் கக்கும் மோகன் பகவத்
தமது உரையில் மதவெறி, அரபு வசந்தம், மார்க்சிய கலாச்சாரம் எனும் வார்த்தைகளினூடாக இதர மதங் களின் மீதும், சித்தாந்தங்களின் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் உமிழ்கிறார் மோகன் பகவத். நூறா வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எஸ்.எஸ். மதவாத அரசியலை முன்வைத்து இந்துத்துவ தேசியத்தை கட்டமைக்கும் இலக்கை கொண்டி ருப்பதை அவரது உரை வெளிப் படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதவெறி நடவடிக்கைகளை முறியடிப்போம்
மதவெறி நோக்கத்தையும், மதக் கலவரத்தை விதைக்கும் விருப்பத் தையும் வெளிப்படுத்தியிருக்கும் மோகன் பகவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, இந்தி யாவின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சி தத்துவம், சமூக நல்லி ணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகிய வற்றுக்கு ஊறு விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை வாத அரசியல், மதவெறி நட வடிக்கைகளை எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றி ணைந்து நமது நாட்டின் மாண்பை பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.