ஜூன் 11 - 20 தமிழகம் முழுவதும் சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சாரம்!
மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
சென்னை, மே 9 - மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய - மாநில அரசுகளை வலி யுறுத்தி, ஜூன் 11 முதல் 20 வரை 10 நாட்களுக்கு மாநிலம் முழு வதும் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், இராஜபாளையத்தில் மே 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக் கட்டுப் பாட்டுக் குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநி லக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மத வெறுப்பு அரசியல் வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி மக்களைப் பிளவு படுத்துவதுடன் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து எதேச்சதிகார நட வடிக்கைகளில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள் ளன. வேலையின்மை, இடம் பெயர்தல் அதிகரித்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் மாநில அரசுகளுக்கு நியாய மாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய 100 நாள் வேலைத் திட்ட ஒதுக்கீடு மற்றும் கல்வி, இயற்கை பேரிடர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமான போக்குகள் உள்ளன. இது, பாஜக வின் கூட்டாட்சி விரோத நட வடிக்கை ஆகும். தமிழகம், கேரளம் பாதிப்பு இவை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமான தமிழ்நாடு மற்றும் கேரளத்தை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளாக வும் உள்ளன. எனவே, இப்பிரச்சனைகளை முன்வைத்தும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் எனவும் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கிளர்ச்சிப் பிரச்சாரம் நடைபெறவுள்ளது. காலிப்பணியிடங்கள் தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள காலிப் பணி யிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தர பணி நியமனங்களை செய்ய வேண்டும்; நிர்வாக நட வடிக்கைகளில் லஞ்சம் அதிகரித்து இருப்பதை தடுத்திடும் உறுதி யான நடவடிக்கைளை அரசு மேற் கொள்ள வேண்டும்; தலித் - பெண்கள் மீது தாக்குதல் பட்டியல் சாதி மக்கள் மீதும், பெண்கள், குழந்தைகள் மீதும் பாலியல் வன்கொடுமைகள், பள்ளிகளிலும் சாதி ரீதியான வன்மம் கொண்ட தாக்குதல்களும் அதிகரித்துள்ளன; இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தாக்குத லுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்படியான தீர்வுகள் தாமதமாகக் கூடாது. தாதுமணல் கொள்ளை தாது மணல் மற்றும் இயற்கை வள ஆதாரங்கள் மீது நடத்தப்படும் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ. சகாயம் அளித்த ஆய்வு அறிக்கையை அமலாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழ கம் முழுவதும் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை - எளிய பட்டியலின மக்களுக்கு வழங்கிட வேண்டும்; குடி மனைப் பட்டா கோரி விண்ணப்பித் துள்ள மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்கிட வேண்டும். 10 நாட்கள் பிரச்சாரம் இந்த கோரிக்கைகளை ஒன்றிய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் நாடு முழுவதும் 2025 ஜூன் 11 முதல் 20-ஆம் தேதி வரை 10 நாட்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நடைபயணம், இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு தீர்மானித்துள்ளது. இந்த முடிவை அமலாக்கு வதில் கட்சி அணிகளும், ஆதரவாளர் களும் முழுமையாக ஈடுபட்டு கிளர்ச்சி பிரச்சாரத்தை வெற்றிப் பெற செய்திட வேண்டுமென மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.